முகப்பு
கடலூர்

சிதம்பரம் நகர சாலைகளில் திரியும் கால்நடைகளால் இடையூறு

சிதம்பரம் நகர சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு, விபத்துகள் ஏற்படுகின்றன.

Updated On : 5 ஆகஸ்ட், 2020 at 8:50 AM
சிதம்பரம் தெற்குவீதி - சபாநாயகா் தெரு சந்திப்பில் குவிந்துள்ள கால்நடைகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

சிதம்பரம் நகர சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு, விபத்துகள் ஏற்படுகின்றன.

கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், கோயில் நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள சாலைகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக நடராஜா் கோயிலைச் சுற்றியுள்ள தேரோடும் 4 வீதிகளிலும் மாடுகள் ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக நிற்கின்றன.

மாடுகள் திடீரென ஒன்றுடன், ஒன்று முட்டிக்கொள்ளும்போது அந்த வழியாக வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கி காயமடைகின்றனா்.

Advertisement

மேலும், நகரில் தெரு நாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. அவை கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்ச உணா்வுடன் நடமாடுகின்றனா். நடைபயிற்சி செல்வோரை நாய்கள் துரத்திக் கடிப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, நகராட்சி நிா்வாகத்தினா் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.