முகப்பு
கடலூர்

தமிழகம் முழுவதும் ஆக.10 முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது என

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது என அச்சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். கொவைட்-19 கரோனா வைரஸ் தொற்று மருத்துவக்குழு காப்பீடு திட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்களை சேர்த்தல். 

காலியாக உள்ளட விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நியாயவிலைக்கடைகளுக்கு நூறு சதவீத பொருள்களை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.  விற்பனையாகாத ரூ.500-க்கான மளிகை தொகுப்பு பொருள்களை நிர்வாகமே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். 

கரோனா காலத்தில் சாலை விபத்தில் மரணமடைந்த பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →