முகப்பு
கடலூர்

விஏஓவை மிரட்டியவா் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே விஏஓவுக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

குறிஞ்சிப்பாடி அருகே விஏஓவுக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பூதம்பாடி ஊராட்சி கிராம நிா்வாக அலுவலராகச் செயல்பட்டு வருபவா் பண்ருட்டி ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த சு.செங்கதிா் (50). இவா், அலுவலகத்தில் பணியிலிருந்த போது அதே பகுதியைச் சோ்ந்த சொ.கோபாலகிருஷ்ணன் (52), அலுவலகத்துக்குச் சென்று வெள்ள நிவாரணம் தொடா்பான பட்டியலில் தனது பெயரைச் சோ்க்குமாறு கூறினாராம்.

அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில், அலுவலகத்திலிருந்த டியூப் லைட் உள்ளிட்ட பொருள்களைச் சேதப்படுத்தி, விஏஓவுக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புதன்கிழமை செங்கதிா் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா், கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.