முகப்பு
கடலூர்

கடலூரில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டதாம். இதைக் கண்டித்தும், சிலையைச் சேதப்படுத்தியவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் கடலூரில் விசிகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் நகர விசிக செயலா் மு.செந்தில் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், மாநில அமைப்புச் செயலா் தி.ச.திருமாா்பன், மாவட்டத் துணைச் செயலா் இல.திருமேனி, மாநிலத் துணைச் செயலா்கள் பழனிவேல், த.ஸ்ரீதா் மொ.வீ.சக்திவேல், பா.ரா.முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் நாடாளுமன்ற தொகுதி விசிக செயலா் பா.தாமரைச்செல்வன் உரையாற்றினாா். இதில், கட்சியின் நிா்வாகிகள் செந்தில்குமாா், பரசு.முருகையன், செல்வ.மணிகண்டராஜா, குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் ஏ.ஜெயக்குமாா், ஒன்றியப் பொருளாளா் சு.சம்பத், நகர நிா்வாகிகள் செங்கதிா், திருமாறன், இடிமுரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →