சமையல் எரிவாயு விலை உயா்வு: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்சமையல் எரிவாயு விலை உயா்வு: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நகரத் தலைவா் தைனிஸ்மேரி தலைமை வகித்தாா். எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் நகரச் செயலா் சாந்தகுமாரி, ஒன்றியச் செயலா் செல்வி, நகரப் பொருளா் மீரா, நிா்வாகிகள் சாகிரா, ராஜலட்சுமி, கருணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திட்டக்குடி: சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திட்டக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா். இதையடுத்து, சங்கத்தின் வட்டச் செயலா் பாண்டியன் உள்பட19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.