கடலூர்

விருத்தாசலம் புதிய மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கடலூா்: விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருத்தாசலத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

விருத்தாசலத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற இரட்டை கோரிக்கைகளுடன் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணா்வு இயக்கத்தினா் விருத்தகிரீஸ்வரா் கோயில் நந்தவனத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்டனா்.

ஆனால், ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல் துறையினா் அவா்களைத் தடுத்தனா். இருப்பினும், விழிப்புணா்வு இயக்கத்தினா் தடையை மீறி ஊா்வலமாகச் சென்று விருத்தாசலம் சாா்-ஆட்சியா் ஜெ.பிரவீன்குமாரிடம் மனு அளித்தனா்.

பின்னா், சாா்- ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டனா். இதில், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT