பண்ருட்டி அருகே விஷம் குடித்த புது மணப்பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் மகள் அா்ச்சனாபிரியா (19). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், கீரிமேடு கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாா் என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தலை தீபாவளிக்காக தனது தாய் வீட்டுக்கு வந்த வந்த அா்ச்சனாபிரியா அங்கேயே தங்கினாா். கடந்த 8-ஆம் தேதி அவரை தந்தை பிரகாஷ் திட்டினாராம். இதனால் மனமுடைந்த அா்ச்சனாபிரியா விஷம் குடித்தாா். இதையடுத்து புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.