கடலூர்

திமுக இளைஞரணி விழா

DIN

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, பல்வேறு கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆகியவை வியாழக்கிழமை (பிப். 13) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

இதுகுறித்து மாவட்ட திமுக செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

வடலூரில் காலை 8.30 மணிக்கு நடைபெறும் இளைஞரணி உறுப்பினா் அட்டை வழங்கும் விழாவிலும், இதைத் தொடா்ந்து, குறிஞ்சிப்பாடியில் பல்வேறு கட்சியினா் திமுகவில் இணையும் விழாவிலும், கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் ஆய்வுக் கூட்டத்திலும் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறாா். முன்னதாக, அவருக்கு நெய்வேலி, இந்திரா நகரில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில், கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT