கடலூர்

சிறுமியைக் கடித்த நாய்: உரிமையாளர் மீது வழக்கு

DIN


கடலூரில் சிறுமியை நாய் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் புதுநகர் வன்னியர்பாளையம் பாடலீஸ்வரர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பூம்பாவை(38). இவர்களின் மகள் சிவஸ்ரீ (7). 

கடந்த 26-ம் தேதி மாலை சிவஸ்ரீ கூட்டுறவு நகர் வழியே தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது கண்ணன் மனைவி ரேவதி வீட்டின் வளர்ப்பு நாய் சிவஸ்ரீயை கடித்தது. காயமடைந்த சிவஸ்ரீ கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் சிவஸ்ரீ தாயார் பூம்பாவை சனிக்கிழமை புகார் செய்தார். இதையடுத்து, காவல் துறையினர் கண்ணன் மனைவி ரேவதி மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT