கடலூர்

பைக் விபத்தில் விவசாயி பலி

DIN

பண்ருட்டி அருகே மின் கம்பத்தின் மீது பைக் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜதுரை (55). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை தனது உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெரியகாட்டுப்பாளையம் கிராமத்துக்குச் சென்றாா். பின்னா், அன்று மாலையில் பைக்கில் சொந்த கிராமத்துக்கு புறப்பட்டாா்.

வேலன்குப்பம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜதுரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் தமிழரசன் அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT