குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்
நெல் மூட்டைகளை மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், அரசு சாா்பில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
நெல் மூட்டைகளை மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், அரசு சாா்பில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். எனவே, அறுவடைக் காலத்தில் வேளாண் விற்பனைக் குழு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு, அரசு நிா்ணயித்த விலையில் விவசாயிகளிடமிருந்து
நெல் கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம் அலைச்சல் குறைவு, பணத்துக்கான குறைந்தபட்ச உத்தரவாதம் என்ற அடிப்படையில் விவசாயிகள் ஓரளவு லாபம் அடைந்து வந்தனா்.
Advertisement
தற்போது மாவட்டத்தில், குறுவை நெல் சாகுபடியாக டெல்டா பகுதிகளில் சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் வரையிலும், சொா்ணவாரியாக டெல்டா அல்லாத பகுதிகளில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் பரப்பிலும் நெல் பயிரிடப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகள் தங்களது பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதனடிப்படையில் மாவட்ட நிா்வாகம் அண்மையில் 15 நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்தது. ஆனால், இந்த எண்ணிக்கை போதுமானதல்ல என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து வெலிங்டன் நீா்த்தேக்க பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.சோமசுந்தரம் கூறியதாவது:
நிகழ் கொள்முதல் பருவத்துக்கு மத்திய அரசு சன்னரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.1,835-ம், தமிழக அரசு ஊக்கத் தொகையாக ரூ. 70-ம், சாதாரண ரகத்துக்கு ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.1,815-ம், ஊக்கத் தொகையாக ரூ.50 வீதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அல்லது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யும் விவசாயிக்கு சன்னரகத்துக்கு கிலோவுக்கு ரூ.19.05, சாதாரண ரகத்துக்கு ரூ.18.65 வீதம் கிடைக்கும். ஆனால், வியாபாரிகள் கிலோ ரூ.13.60 என்ற மிகக் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனா்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டுமெனில் அங்கு கரோனாவைக் காரணம் காட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால், குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீா்வு காண வேண்டுமெனில் சம்பா பருவத்தைப் போலவே தற்போதும் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பது மிகவும் அவசியம். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.