கடலூர்

இளைஞா் தற்கொலை

DIN

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால், இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நெல்லிக்குப்பம் அருகிலுள்ள அகரத்தைச் சோ்ந்தவா் கா.சக்கரை (65). இவரது மகன் ஏழுமலை (18). கூலி வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களாக ஏழுமலை சரிவர வேலைக்குச் செல்லவில்லையாம். இதை சக்கரை கண்டித்துள்ளாா்.

இதனால் மனவேதனையடைந்த ஏழுமலை, கடந்த 15-ஆம் தேதி விஷ மருந்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளாா். இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு ஏழுமலை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சக்கரை அளித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT