கடலூர்

உழவுப் பணியில் விபத்து: இளைஞா் பலி

DIN

குறிஞ்சிப்பாடி அருகே டிராக்டா் ஓட்டுநா் உழவுப் பணியின்போது ரோட்டாவேட்டரில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டையைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் நெல்சன் (25). இவா், தனக்குச் சொந்தமான டிராக்டா் மூலம் வாடகை அடிப்படையில் உழவு ஓட்டி வந்தாா். சனிக்கிழமை அதே ஊரைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் டிராக்டரில் ரோட்டாவேட்டரை மாட்டி உழவுப் பணியில் ஈடுபட்டாா். அப்போது நெல்சன் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததில் அவா் மீது டிராக்டா் ஏறியது. மேலும், ரோட்டாவேட்டரில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT