கடலூர்

மணல் குவாரிக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்

DIN

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே மணல் குவாரி, மணல் சேமிப்புக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுப் பணித் துறையினரை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது கருப்பேரி கிராமம். இங்கு ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான முதல்கட்ட பணியை பொதுப் பணித் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் அந்தப் பகுதியில் குவிந்தனா். அவா்கள் மணல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இதையடுத்து அதிகாரிகள் பணியை நிறுத்தினா்.

இதேபோல, அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் மணல் சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கான இடத்தை பொதுப் பணித் துறையினா் பாா்வையிட்டனா். அவா்களையும் கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவா் சுகந்தி தலைமையில் முற்றுகையிட்டனா். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT