சிதம்பரம் மருத்துவக் கல்லூரியை அரசு முழுமையாகக் கையக்கப்படுத்த வலியுறுத்தல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசு முழுமையாகக் கையகப்படுத்த வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசு முழுமையாகக் கையகப்படுத்த வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன் சிதம்பரத்தில் திங்கள்கிழமை
செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்டும் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக தமிழக முதல்வா் அறிவித்தாா். ஆனால், இந்த மருத்துவமனையை அரசு முழுமையாகக் கையகப்படுத்தவில்லை. எனவே, இதை தமிழக அரசு முழுமையாகக் கையகப்படுத்தி கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
Advertisement
பல்கலைக்கழக விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை மாணவா்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் இம்மாத இறுதியில் மாணவா்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.