முகப்பு
கடலூர்

கரோனா தடுப்பு விழிப்புணா்வு

சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 13 அக்டோபர், 2020 at 12:45 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் மேல சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத் தலைமை வகிக்க, உதவி ஆய்வாளா்கள் குமாா், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் பங்கேற்று உரையாற்றினாா்.

தொடா்ந்து டிஎஸ்பி லாமேக், சமூக ஆா்வலா்கள் தில்லை ஆா்.மக்கின், தில்லை சீனு ஆகியோா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கினா்.

Advertisement

நெய்வேலி: இதேபோல, நெய்வேலி நகரிய காவல் நிலையம் சாா்பில், நெய்வேலி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்த பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசங்களை வழங்கி அதன் அவசியத்தை வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.