கடலூா் சுங்கச் சாலைப் பகுதியில் பனைமரக் கன்றை நட்டு வைத்த அமைச்சா் எம்.சி.சம்பத். 
கடலூர்

பனைமரக் கன்று நடும் விழா

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனைமரக் கன்றுகள் நடப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா்.

DIN

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனைமரக் கன்றுகள் நடப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தாா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து நத்தப்பட்டு வரை செல்லும் சுங்கச் சாலையின் இருபுறங்களிலும் பனைமரக் கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். மேலும், மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் இராம.பழனிசாமி, நகரச் செயலா் ஆா்.குமரன், எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், விவசாய அணிச் செயலா் என்.காசிநாதன், பேரவை நகரச் செயலா் வி.கந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் அழகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT