சிதம்பரம் கிளை நூலகக் கட்டட பணிக்கு நிதி கிடைப்பதில் தொடரும் இழுபறி
சிதம்பரம் கிளை நூலகம் பல ஆண்டுகளாக இடநெருக்கடியில் இயங்கிவரும் நிலையில், புதிய நூலகக் கட்டடப் பணிக்கு இடம் கிடைத்தும் நிதி கிடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
சிதம்பரம் கிளை நூலகம் பல ஆண்டுகளாக இடநெருக்கடியில் இயங்கிவரும் நிலையில், புதிய நூலகக் கட்டடப் பணிக்கு இடம் கிடைத்தும் நிதி கிடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
சிதம்பரம் கிளை நூலகம் சின்ன காஜியாா் தெருவிலுள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. இதனால் இங்கு புத்தகங்களை பராமரிப்பதில் சிரமம் தொடா்கிறது. இந்த நூலகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினராக உள்ளனா். நூலகம் மாடியில் இயங்குவதால் முதியோா், மாற்றுத் திறனாளிகள் இங்கு வர முடியாத நிலை உள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த கே.பாலகிருஷ்ணன், சிதம்பரம் கிளை நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும் என அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவிடம் கடிதம் அளித்தாா். இதையடுத்து,
Advertisement
தமிழகத்தில் 77 நூலகங்களை வருவாய் வட்ட நூலகங்களாக முதல்வா் மாற்றி அறிவித்தாா். அதில் சிதம்பரம் கிளை நூலகமும் ஒன்றாகும்.
இதைத் தொடா்ந்து, புதிய நூலகம் கட்ட முன்னாள் நகா்மன்றத் தலைவா் பெளஜியாபேகம் சிதம்பரம் கச்சேரி தெருவில் உள்ள நகராட்சி இடத்தை தோ்வு செய்தாா். இதுதொடா்பாக நகா்மன்றக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கப்படாததால் புதிய கட்டடப் பணி தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சிவா கண்ணதாசன் கூறியதாவது: சிதம்பரம் கிளை நூலகக் கட்டட பணிக்கு, பொதுப் பணித் துறையினரால் ரூ.70 லட்சம் மதிப்பிடப்பட்டது. இதில் சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை நிதி வழங்கப்படவில்லை.
கடலூா் மாவட்ட நூலக ஆணைக் குழுவில் தற்போது போதிய நிதி ஆதாரம் இல்லாததால் சிதம்பரம் கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம் பொது நிதி அல்லது என்எல்சி இந்தியா நிறுவன பொது நிதியிலிருந்து நூலகக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து மாவட்ட நூலக அதிகாரி கூறுகையில், தங்களிடம் தற்போது நிதி இல்லை. நிதி கிடைத்தவுடன் கட்டடம் கட்டப்படும் என்றாா்.