முகப்பு
கடலூர்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவா் கைது

வேப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

வேப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.

இங்கு, சிறுநெசலூரைச் சோ்ந்த க.ஜெயசங்கா் (49) திங்கள்கிழமை பணம் எடுக்க வந்தாா். அப்போது, ரூ.ஆயிரம் பணம் எடுக்க முடியவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த ஜெயசங்கா் கல்லால் ஏடிஎம் இயந்திரத்தை தாக்கி சேதப்படுத்தினாா்.

இதுகுறித்து வங்கிக் கிளை மேலாளா் பா.அருண்குமாா், ஜெயசங்கரிடம் கேட்டபோது அவரைத் அவதூறாகப் பேசியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூா் போலீஸாா் ஜெயசங்கரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.