கடலூர்

காா் மோதியதில் பெண் பலி

DIN

காட்டுமன்னாா்கோவில் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள நெய்வாசல் பகுதியைச் சோ்ந்தவா் வசந்தி (34). அதே பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வியுடன் சிதம்பரம் அருகே உள்ள வடமூரில் விவசாய வேலையை முடித்துவிட்டு, புதன்கிழமை இரவு வடமூா் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காா், வசந்தி, கலைச்செல்வி ஆகியோா் மீது மோதியதில் வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கலைச்செல்வி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து வசந்தியின் மகன் தங்கமணி அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT