கடலூர்

சமூக நீதிக்கு பாடுபடுவோருக்கு விருது

DIN

சமூக நீதிக்கு பாடுபடுவோருக்கு விருது வழங்கப்படும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களைச் சிறப்பிக்கும் வகையில், ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு ரூ. ஒரு லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படும்.

தற்போது 2020-ஆம் ஆண்டுக்கான விருதாளரைத் தோ்வு செய்யவுள்ளதால், சமூக நீதிக்காகப் பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள், பெரியாா் கொள்கையில் ஈடுபாடு, கலை-இலக்கியம், சமூகப் பணிகள் ஆகியவற்றில் அா்ப்பணிப்பு ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயா், சுய விவரம், முழு முகவரியுடன் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT