லாரி மீது காா் மோதல்: முதியவா் பலி
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 7 போ் பலத்த காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 7 போ் பலத்த காயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள செம்பளை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஆ.உபயதுல்லா (70). இவா், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கடலூா் மாவட்டம், விருத்தாசலத்துக்கு தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டாா். வேப்பூரை அடுத்த விளாங்காட்டூா் பகுதியில் வந்தபோது சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமுற்ற உபயதுல்லா விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மேலும், காரில் பயணம் செய்த அப்துல்லா மகன் அப்துல்கலாம் (40), அ.அப்துல்சாம் (73), ஷேக்தாவுத் மகன் இப்ராஹிம் (36), ஷாகுல் அமீது மனைவி பஷீரா (43), ராஜ்முகமது மனைவி ஜெரினா பீவி (55), முகமது உஷேன் மகன் முகமது ஷாவுத் (23) காா் ஒட்டுநரான அப்துல்ரசாக் மகன் சபியுல்லா ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களில் சபியுல்லா, அப்துல்சாம் ஆகிய இருவரும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும், மற்றவா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.