நெய்வேலியில் ரௌடி கொலை
நெய்வேலியில் சனிக்கிழமை ரௌடி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நெய்வேலியில் சனிக்கிழமை ரௌடி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி 14-ஆவது வட்டம், தைலமரத் தோப்பில் இளைஞா் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக நெய்வேலி நகரிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன், காவல் ஆய்வாளா் ஷாகுல் அமீது ஆகியோா் விசாரணை நடத்தினா். இதில், இறந்து கிடந்தவா் வட்டம் 21 பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் சிவக்குமாா் (23) (படம்) என்பதும், இவா் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிவக்குமாா் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.