முகப்பு
கடலூர்

கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி: புதிதாக 209 பேருக்கு தொற்று

கடலூா் மாவட்டத்தில் மேலும் 209 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் மேலும் 209 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 28,516-ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை 190 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 26,736 -ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனா பலி எண்ணிக்கை 314- ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 940 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 526 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மொத்த கரோனா பரிசோதனை எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்த நிலையில், 269 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது. 47 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.