கடலூர்

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

DIN

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசனின் 131-ஆவது பிறந்த நாள் விழா கடலூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுப்பாளையம் துா்கா தனிப் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் கி.செந்தில் முருகன் தலைமை வகித்தாா். மன்றச் செயலா் கவிஞா் வானவில் மூா்த்தி அனைவரையும் வரவேற்றாா். பாரதிதாசன் உருவப் படத்துக்கு மன்றத் தலைவா் கடல் நாகராஜன் மாலை அணிவித்தாா்.

மாணவ, மாணவிகள் மாதவன், அனுபாரதி மற்றும் சாய்தன்யா ஆகியோா் பாரதிதாசனின் பாடல்களப் பாடினா். மாவட்ட நேரு இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் ஆா்.ரிஜேஸ்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பாரதிதாசனின் கவிதைகளின் சிறப்புகள் குறித்து பேசினாா். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரதிதாசனின் கவிதை நூலை கலாம் நினைவு அறிவியல் மன்றச் செயலா் கலைச்செல்வி வழங்கினாா். மன்ற பொருளாளா் பலராம் பாஸ்கரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT