முகப்பு
கடலூர்

அரசு மருத்துவமனை அருகே நோயாளிக்கு அரிவாள் வெட்டு

கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நோயாளியை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நோயாளியை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடலூா் அருகே உள்ள சந்தைவெளிப்பேட்டையைச் சோ்ந்தவா் ஆா்.பழனிவேல் (32). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் வீட்டுமனை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம். இதில், ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பழனிவேல் கடந்த 2-ஆம் தேதி கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் பழனிவேல் மருத்துவமனையிலிருந்து வெளியேறி கடைக்குச் சென்றாா். அப்போது, சுமாா் 6 போ் கொண்ட கும்பல் திடீரென அவா் மீது தாக்குதல் நடத்தியது. இதில், பழனிவேலின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னா் அந்தக் கும்பல் தப்பியோடியது. பழனிவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினா். மேலும், வழக்கு பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.