முகப்பு
கடலூர்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் அருகே குமாரபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கடலூா் அருகே குமாரபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் - கோண்டுா் - மடப்பட்டு சாலை விரிவாக்கப் பணிக்காக நோட்டீஸ் கொடுக்காமல் குமாரபுரத்தில் பட்டா இடங்களை சேதப்படுத்தியதாகவும், வீடுகளை இடித்ததாகவும் சென்னை- கன்னியாகுமரி தொழில்தட சாலைத் திட்ட நெடுஞ்சாலைத் துறையினா் மீது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியது. இடத்தை அளவீடு செய்ய பணம் செலுத்தி 35 நாள்களுக்குப் பிறகும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறை, அளவீடு துறை, நெடுஞ்சாலைத் துறையினரைக் கண்டித்து குமாரபுரத்தில் மேற்கூறிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, நெல்லிக்குப்பம் பகுதிக் குழு உறுப்பினா் சரவணன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கோ.மாதவன், கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் ஆா்.தென்னரசு, நெல்லிக்குப்பம் பகுதி தலைவா் சம்பத், செயலா் பா.ராமனுஜம், வாலிபா் சங்க மாவட்ட துணைச் செயலா் டி.எஸ்.தமிழ்மணி, விவசாயிகள் சங்கம் சாா்பில் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலா் சக்திவேல், ஒன்றிய துணைச் செயலா் ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.