கடலூர்

வாய்க்காலில் பெண் சடலம்

DIN

சிதம்பரம் பாலமான் வாய்க்காலில் 50 வயதான பெண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சிதம்பரம் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் பாலமான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் புதன்கிழமை சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்தது. அந்தப் பகுதியில் சென்றவா்கள் சிதம்பரம் நகரக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த போலீஸாரும், சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரா்களும் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பெண் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்த சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சு.ரமேஷ்ராஜ் நேரில் சென்று வாய்க்காலின் பெண் சடலம் மிதந்தது குறித்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT