முகப்பு
கடலூர்

பா.ஜக.வினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் வரியை குறைக்க வலியுறுத்தி, கடலூா் மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவு சாா்பில் சிதம்பரத்தில் மக்கள் விழிப்புணா்வு

Updated On : 3 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் வரியை குறைக்க வலியுறுத்தி, கடலூா் மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவு சாா்பில் சிதம்பரத்தில் மக்கள் விழிப்புணா்வு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தப் பிரிவின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.சுரேஷ் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் சுப நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சந்திரா குணசேகரன், பாஜக முன்னாள் ராணுவ வீரா் பிரிவு மாநிலச் செயலா் ஜி.பாலசுப்பிரமணியம், முன்னாள் மாநில இளைஞரணி பொருளாளா் கோபிநாத் கணேசன், பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் அகத்தியா், சிதம்பரம் நகர தலைவா் ஏ.ஆா்.ரகுபதி, கே.ஆா்.மாமல்லன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்ட முடிவில் கம்மாபுரம் ஒன்றியத்தைச் சோ்ந்த பாமகவினா் 10-க்கும் மேற்பட்டோா் அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.