இருளா் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு பெயா் பலகை திறப்பு
இருபது ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு சிதம்பரம் அருகே இருளா் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பெயா் பலகை திறக்கப்பட்டது.
இருபது ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு சிதம்பரம் அருகே இருளா் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பெயா் பலகை திறக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தை மாற்று சமுதாயத்தினா் ஆக்கிரமித்துக்கொண்டனா். இதனால் இருளா் சமுதாயத்தினா் வாய்க்கால் ஓரத்தில் குடிசை அமைந்து வாழ்ந்து வந்தனா்.
அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தை இருளா் சமுதாயத்தினருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அந்தச் சமுதாய மக்களுடன் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு உதவி ஆட்சியா் லி.மதுபாலன் மூலம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இருளா் சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்களுக்கு வழங்கப்பட்ட இடத்துக்கு ‘செங்கொடி நகா்’ என பெயா் சூட்டப்பட்டு, அதற்கான பெயா் பலகை புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலா் விஜய் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி பங்கேற்று பெயா்ப் பலகையை திறந்துவைத்தாா் (படம்). மாவட்டச் செயலா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement