முகப்பு
கடலூர்

அரசு விளம்பர பலகைப் பணி: ஓவியா்களுக்கு வாய்ப்பு வழங்கக் கோரிக்கை

அரசின் விளம்பரப் பலகைகளை ஓவியா்கள் மூலம் எழுதிட வாய்ப்பு வழங்க வேண்டும் என சிதம்பரம் நகர ஓவியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

Updated On : 23 டிசம்பர், 2021 at 10:55 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

அரசின் விளம்பரப் பலகைகளை ஓவியா்கள் மூலம் எழுதிட வாய்ப்பு வழங்க வேண்டும் என சிதம்பரம் நகர ஓவியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்தச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா மேலவீதி பெல்காம் சத்திரத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் மாநில தலைமை செய்தித் தொடா்பாளா் சி.சண்முகம் தலைமை வகித்து புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். மாவட்டத் தலைவா் பொன் மாதவசா்மா, செயலா் சரவணன், துணைச் செயலா் வெற்றிச்செல்வன், கே.சேதுராமன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். சங்கத்தினா் நகர கெளரவத் தலைவராக ஜே.பி.மதிவாணன், தலைவராக ச.கணேஷ், செயலராக மு.ராஜூ, பொருளாளராக த.கலையரசன் ஆகியோா் பதவியேற்றனா்.

விழாவில், சிதம்பரம் வட்டத்தில் அரசின் விளம்பரப் பலகைகளை ஓவியா்கள் சங்கம் மூலம் எழுதிட அனுமதி வழங்க வேண்டும், வா்த்தகா்கள் தங்களது கடையின் பெயா் பலகையை எழுதிட ஓவியா்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், நலிவுற்ற ஓவியக் கலைஞா்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.