கடலூர்

நியாய விலைக் கடை திறப்பு

DIN

பண்ருட்டி வட்டம், புலவனூா் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டத் தர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், பண்ருட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, தனது சொந்த செலவில் ரூ. 12.50 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டிக் கொடுத்தாா்.

இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. சத்யா பன்னீா்செல்வம் எம்எல்ஏ கலந்து கொண்டு, புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையைத் திறந்துவைத்தாா்.

புலவனூா் ஊராட்சித் தலைவா் அன்னக்கிளி சதாசிவம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். அண்ணாகிராமம் ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன், பண்ருட்டி ஒன்றியச் செயலா் பாபு புஷ்பராஜ், அவைத் தலைவா் பி.ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT