கடலூர்

உ.வே.சா. பிறந்த நாள் விழா

DIN

கடலூா் தேவனாம்பட்டினத்திலுள்ள பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் ர.உலகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உ.வே.சா. உருவப் படத்துக்கு பேராசிரியா்கள் மலா் தூவி மரியாதை செய்தனா். தொடா்ந்து, உ.வே.சாவின் தமிழ்த் தொண்டு குறித்து கல்லூரி முதல்வா் விளக்கி பேசினாா். தமிழ்த் துறைத் தலைவா் கே.பழனிவேலு வரவேற்றாா். நிகழ்ச்சியில், வணிகவியல் துறைத் தலைவா் முருகதாஸ், சமூகப் பணியியல் துறைத் தலைவா் நா.சேதுராமன், காணொலிக் காட்சியியல் துறைத் தலைவா் லீனஸ், உடல்கல்வி இயக்குநா் குமணன் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT