கடலூர்

சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

DIN

கடலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை சோ்ந்த ராஜசேகா் மகன் விஜயகுமாா் (26 ). வாகன ஓட்டுநா். இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு கடலூா் சுப்பராயலு நகரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிச்செல்வி போக்சோ சட்டத்தின்கீழ் விஜயகுமாா் மீது வழக்குப் பதிவு செய்தாா். இந்த வழக்கு விசாரணை கடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கில், போக்சோ சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஏழிலரசி அளித்த தீா்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து விஜயகுமாா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT