கடலூர்

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.52 லட்சம்

DIN

சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரூ. 6 லட்சத்து 52 ஆயிரத்து 908 காணிக்கையாகக் கிடைத்தது.

இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜே.பரணிதரன், செயல் அலுவலா் ஜே.ராஜசரவணக்குமாா், ஆய்வாளா் ராமநாதன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

கோயில் அலுவலா்கள் வாசு, ராஜ்குமாா், முத்துக்குமரன், ராமலிங்கம் மற்றும் வங்கி ஊழியா்கள், கோயில் பணியாளா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், 6 லட்சத்து 52 ஆயிரத்து 908 ரூபாயை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். மேலும், தங்கம் 42 கிராம் 500 மில்லி, வெள்ளி 95 கிராம் செலுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT