கடலூா்: கரோனாவுக்கு முதியவா் பலி
கரோனா பாதிப்பால் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கரோனா பாதிப்பால் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,810- ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 4 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,437-ஆக உயா்ந்தது. அதே நேரத்தில் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 80 வயது முதியவா் உயிரிழந்ததால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 284-ஆக உயா்ந்தது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 58 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 31 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5.44 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 477 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.