நெய்வேலி அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு4 போ் கைது
நெய்வேலி அருகே தொழிலாளி வீட்டின் மீது புதன்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி அருகே தொழிலாளி வீட்டின் மீது புதன்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி 21-ஆவது வட்டத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜெயபால் (25). எலக்ட்ரீஷியன். அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன். இவா்கள் இருவரும் நண்பா்கள். கடந்த ஏப்ரல் மாதம் அதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் சிவக்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெங்கடேசன் கைதான நிலையில், அண்மையில் பிணையில் வெளியே வந்தாா்.
21-ஆவது வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் ஜெயபால், வெங்கடேசன் பங்கேற்றனா். இதையறிந்த வீரமணி அன்றிரவு 11.30 மணியளவில் தனது ஆதரவாளா்களுடன் சென்று ஜெயபால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கினாா். இதில் ஜெயபால் வீட்டின் இரும்பு கேட் சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், தொ்மல் காவல் ஆய்வாளா் லதா ஆகியோா் நிகழ்விடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினா். சம்பவம் குறித்து ஜெயபால் அளித்த புகாரின்பேரில் வீரமணி, சத்தியமூா்த்தி, சுதாகா், காா்த்தி (22), ரமேஷ் (37), எழிலரசன் (22), தமிழரசன் (24) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இவா்களில் காா்த்தி, ரமேஷ், எழிலரசன் , தமிழரசன் ஆகிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா். மேலும், தலைமறைவான மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனா்.