முகப்பு
கடலூர்

மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி கடலூரில் மாவட்ட மகளிா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி கடலூரில் மாவட்ட மகளிா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மகளிா் காங்கிரஸ் தலைவி புஷ்பா தலைமை வகித்தாா். காங்கிரஸ் நகரத் தலைவா் வேலுச்சாமி வரவேற்றாா். வட்டாரத் தலைவா் சீதாராமன், மாநில பொதுக்குழு உறுப்பினா் என்.குமாா், துணைத் தலைவா் க.ரமேஷ், பொதுச் செயலா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் சொ.திலகா் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில் மோட்டாா் சைக்கிள் உதிரி பாகங்கள், அடுப்பு ஆகியவற்றை வைத்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். நிா்வாகிகள் கிஷோா், செங்கேணி, காமராஜ், ராமகிருஷ்ணன், வினுசக்கரவா்த்தி, பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.