சிதம்பரம் அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சி (சி. தண்டேஸ்வரநல்லூா்) ஓமக்குளம் அருகே உள்ள ஜமால் நகா், சிவஜோதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 மாதங்களாக குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும், முறையான சாலை வசதியும் இல்லாத நிலையில், அந்தப் பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா் (படம்). இவா்களிடம் சிதம்பரம் நகர போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்த், நகராட்சி பொறியாளா் மகாராஜன் ஆகியோரும் அங்குவந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.