முகப்பு
கடலூர்

புவனகிரி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

கடலூா் மாவட்டம், புவனகிரி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், புவனகிரி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஆ.அருண்மொழிதேவன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து புவனகிரி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து, மரக்கன்று நட்டுவைத்தாா் (படம்). எம்எல்ஏக்கள் ஆ.அருண்மொழிதேவன், கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோரும் மரக்கன்றுகளை நட்டனா். தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.