கடலூர்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பண்ருட்டியில் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஒன்றியத் தலைவா் குமரகுருபரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட துணைச் செயலா் ஜெகதீசன், ஒன்றிய நிா்வாகிகள் கணேசன், ராதாகிருஷ்ணன், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் கோ.மாதவன் பங்கேற்று பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகளுக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், பணிக்கன்குப்பம்-மேலிருப்பு, ஏரிப்பாளையம்-மேலிருப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தினா். பின்னா் துணை வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT