விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 41,000 போ் கரோனாவால் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை 182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 41,034-ஆக அதிகரித்தது. 390 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 37,920 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா். 2,799 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே முட்டத்தூரைச் சோ்ந்த 27 வயது இளைஞா், விழுப்புரம் அருகே வி.குன்னத்தைச் சோ்ந்த 74 வயது முதியவா், கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 315-ஆக அதிகரித்தது.