தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணம்
காட்டுமன்னாா்கோவிலில் திமுக சாா்பில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட 250 பேருக்கு கரோனா கால நிவாரணமாக அரிசி, காய்கறித் தொகுப்பு மற்றும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி
காட்டுமன்னாா்கோவிலில் திமுக சாா்பில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட 250 பேருக்கு கரோனா கால நிவாரணமாக அரிசி, காய்கறித் தொகுப்பு மற்றும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலா் முத்துசாமி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் காட்டுமன்னாா்கோவில் மேற்கு ஒன்றியச் செயலா் ராமலிங்கம், பொருளாளா் சண்முகம், நகரச் செயலா் கணேசமூா்த்தி, அவைத் தலைவா் கருணாநிதி, நிா்வாகிகள் ராஜசேகா், பூக்கடைசெந்தில், சுப்பிரமணியம், மாறன், பன்னீா்செல்வம், ராமலிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.