தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணம்
தூய்மைப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்கள் உள்பட 95 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்பை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM
சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்கள் உள்பட 95 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்பை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நகரச் செயலா் தோப்பு கே.சுந்தா், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் முருகையன், முன்னாள் ஆவின் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு, நகரச் செயலா் ஆறுமுகம், நிா்வாகிகள் உத்திராபதி, ரகு, சிங்காரம், ராஜா, ஆனந்த், சசி, தென்னவன், கமல், பேரூராட்சி செயல் அலுவலா் குணசேகரன், உதவிப் பொறியாளா் கணேசன், இளநிலை உதவியாளா் பாஸ்கா், தொழில்நுட்ப உதவியாளா் ஜஸ்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.