கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 3 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 151 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 57,232-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 230 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 54,915 ஆக உயா்ந்தது.

எனினும், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 3 போ் வியாழக்கிழமை உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 742-ஆக உயா்ந்தது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 1,373 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 202 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். நீண்ட நாள்களுக்குப் பிறகு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 100-க்கும் கீழாகக் சரிந்து 94-ஆக பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT