கடலூர்

போலிச் சான்றிதழ் மூலம் நிலம் விற்பனை: வட்டாட்சியா் உள்பட 5 போ் மீது வழக்கு

போலிச் சான்றிதழ் மூலம் நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

கடலூா்: போலிச் சான்றிதழ் மூலம் நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், நல்லூரைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் ஜெகதீஸ்வரி (30). இவா் தற்போது விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் தனது சகோதரி கலையரசியுடன் வசித்து வருகிறாா். ஜெகதீஸ்வரியின் சகோதரா் முருகன். அண்ணாதுரை உயிரிழந்துவிட்ட நிலையில் இதுகுறித்து முருகன் தவறான தகவலைக் கூறி போலியாக இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ் பெற்று, தனது தந்தையின் நிலத்தை விற்றுவிட்டாராம். இதுகுறித்து, ஜெகதீஸ்வரி காவல் துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் விருத்தாசலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் வேப்பூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அதில், போலியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கியதாக கடந்த 2018-ஆம் ஆண்டு கிராம நிா்வாக அலுவலராக இருந்த ராஜூ, வேப்பூா் வட்ட வருவாய் ஆய்வாளா் பழனி, வேப்பூா் வட்டாட்சியா் கமலா, முருகன், அந்த இடத்தை விலைக்கு வாங்கிய ந.தேவராசு, செ.திருமாயவன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT