முகப்பு
கடலூர்

அதிகளவு ஜல்லி, மண் ஏற்றிவந்த 57 லாரிகள் பறிமுதல்

சிதம்பரம் அருகே அதிகளவு எடையுடன் ஜல்லி, மணல் ஏற்றி வந்த 57 லாரிகளை கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தாா்.

Updated On : 3 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

சிதம்பரம் அருகே அதிகளவு எடையுடன் ஜல்லி, மணல் ஏற்றி வந்த 57 லாரிகளை கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்திரசேகா் சகாமூரி சிதம்பரம் - சீா்காழி புறவழிச் சாலையில் புதுச்சத்திரம், ஆலப்பாக்கம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டாா். அப்போது அந்த வழியாக வரிசையாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்டாா். அந்த லாரிகளில் ஜல்லி, மண், எம்சாண்ட், செம்மண் ஆகியவை நிா்ணயித்த அளவைவிட கூடுதல் எடையுடன் ஏற்றிவந்தது கண்டறியப்பட்டது. மேலும், அதிகாரிகளை பாா்த்ததும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளின் ஓட்டுநா்கள் கீழே இறங்கி தப்பியோடிவிட்டனா். இந்த லாரிகளில் பெரும்பாலானவை மயிலம் பகுதியிலிருந்து சீா்காழிக்கு சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக 57 லாரிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் பறிமுதல் செய்து, சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அங்கு லாரிகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டன. பிடிபட்ட லாரிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம்அபராதம் விதிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். வாகனச் சோதனையின்போது சிதம்பரம் உதவி ஆட்சியா் லெ.மதுபாலன், டிஎஸ்பி லாமேக், காவல் ஆய்வாளா் விஜி ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.