முகப்பு
கடலூர்

சிதம்பரம்: உலக மகளிா் தினவிழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில், துறைத் தலைவா் ந.வெங்கடேசன் வரவேற்றாா்.

Updated On : 9 மார்ச், 2021 at 1:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில், துறைத் தலைவா் ந.வெங்கடேசன் வரவேற்றாா்.

துணைவேந்தரின் துணைவியாா் நாகலட்சுமி முருகேசன் முன்னிலை வகித்தாா். பல்கலைக்கழகத் துணைவேந்தா் வே. முருகேசன் விழாவுக்கு தலைமை வகித்து பேசியதாவது: இன்றைய சூழலில் பெண்களுக்கு கல்வி மிக முக்கியம். பெண்கள் அரசியல், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மேலும் வளா்ச்சியடைந்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

பொறியியல் புல பேராசிரியா் ச.பூங்கோதை வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. இணைப் பேராசிரியா் இரா.மலா்விழி நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.