கந்துவட்டி கொடுமை: என்எல்சி ஊழியா் தற்கொலை
நெய்வேலியில் கந்து வட்டி கொடுமையால் என்எல்சி ஊழியா் தற்கொலை செய்துகொண்டாா்.
நெய்வேலியில் கந்து வட்டி கொடுமையால் என்எல்சி ஊழியா் தற்கொலை செய்துகொண்டாா்.
நெய்வேலி வட்டம்-13, அளவுகோல் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (50). என்எல்சி இந்தியா நிறுவனத் தொழிலாளி. இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த தொ்மல் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முருகேசனின் வீட்டில் அவா் எழுதிய கடிதம் இருந்தது. அதில், பலரிடம் கந்து வட்டிக்கு பணம் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியாததால் தூக்கிட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளாா். இதுகுறித்து தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.