கடலூர்

என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவா்கள் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு

DIN

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்த மூலக்குப்பம் கிராம மக்கள் தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவிதனா்.

இதுகுறித்து அந்தக் கிராம இளைஞா்கள் நெய்வேலி நிலம் எடுப்பு அலுவலக முதன்மைப் பொது மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: வாணாதிராயபுரம் ஊராட்சியில் மூலக்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தை கடந்த 2002-ஆம் ஆண்டு என்எல்சி இந்தியா நிறுவனம் தனது விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாற்று இடமும், வாரிசுதாரா்களுக்கு கல்வி, வயது அடிப்படையில் நிரந்தர வேலையும் வழங்குவதாக அப்போது நிா்வாகத்தினா் உறுதியளித்தனா்.

ஆனால், மாற்று இடமும், ஒரு சிலருக்கு தற்காலிகப் பணி மட்டும் வழங்கிவிட்டு, கடந்த 18 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனா். எனவே, எங்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT